என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பட்டப்பகலில் வீடு புகுந்து பணம் திருடிய வாலிபர் கைது
    X

    கோப்பு படம்.

    பட்டப்பகலில் வீடு புகுந்து பணம் திருடிய வாலிபர் கைது

    • வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தினர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு காமாரஜ் நகரை சேர்ந்தவர் மாதவன் இவரது மனைவி சுமதி இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதவன் இறந்து விட்டார். இதனால் சுமதி தனது கடைசி மகள் செல்வராணியுடன் வசித்து வருகிறார்.

    குடும்பத்தை நடத்த சுமதி அங்குள்ள சோப்பு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை சுமதி வேலைக்கு சென்று விட்டார். அவரது இளைய மகள் செல்வராணி தனது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார். மதியம் சுமதி வேலை முடிந்து வீட்டு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டிருந்ததை பார்த்து சுமதி திடுக்கிட்டார்.

    யாரோ மர்ம நபர்கள் சுமதி வேலைக்கு செல்வதை நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாத போது நைசாக வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து சுமதி திருபுவணை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தினர். விசாரணையில் சுமதி வீட்டில் பணம் திருடியது மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரபு வயது.29 என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபு மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×