என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
முன்விரோதத்தில் மீனவருக்கு அரிவாள் வெட்டு
- மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
- முத்து மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப் பாளையத்தை அடுத்த திப்புராயப்பேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்த வர் அசோக் (வயது28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு அசோக் திப்புராயப் பேட்டை சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் விக்னேஷ் ஆகியோ ருடன் அங்குள்ள கடையில் நின்று பேசிக்கொண்டி ருந்தார்.
அப்போது அங்கு வந்த முத்து திடீரென அசோக் மற்றும் அவரது நண்பர்க ளிடம் தகராறு செய்தார். பின்னர் முத்து போன் செய்து தனது கூட்டா ளிகளை அங்கு வரவழைத்தார். முத்துவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அசோக் மற்றும் அவரது நண்பர்களை கல்லால் தாக்கினர்.மேலும் அவர்களது மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்ப டுத்தினர். அதோடு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அசோக்கின் தலையில் வெட்டினர்.
இதனால் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் அலறல் சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே முத்து மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அசோக் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீகாந்த், விக்னேஷ் ஆகிய 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த அசோக் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து அவரது கூட்டாளிகளானை ரஞ்சித், சற்குரு, ஹரி ஆகிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்