என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அளவுக்கு அதிமாக மது குடித்த பொதுப்பணித்துறை ஊழியர் சாவு
- அளவுக்கு அதிமாக மது குடித்த பொதுப்பணித்துறை ஊழியர் பலியானார்.
- இதற்கிடையே தனிமையில் வசித்து வந்த ரவிச்சந்திரன் மது பழக்கத்துக்கு ஆளானார்.
புதுச்சேரி:
அளவுக்கு அதிமாக மது குடித்த பொதுப்பணித்துறை ஊழியர் பலியானார். புதுவை முருங்கப்பாக்கம் அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பொதுப்பணித்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரர் ரவிக்குமார் (வயது47). பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியரான இவர் முருங்கப்பாக்கத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி அவரது மனைவி 2 மகள்களுடன் நாகப்பட்டி னத்தில் தாய் வீட்டில் தங்கி ரேசன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் ரவிச்சந்திரன் குடிநீர் தேக்க தொட்டி அலுவலகத்திலேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.
அவ்வப்போது ரவிச்சந்திரன் நாகப்பட்டி ணத்துக்கு சென்று மனைவி-மகள்களை பார்த்து விட்டு வருவார்.
இதற்கிடையே தனிமையில் வசித்து வந்த ரவிச்சந்திரன் மது பழக்கத்துக்கு ஆளானார். சம்பாதிக்கும் பணத்தை அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து செலவழித்து வந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு அவரது சகோதரர் சிவக்குமார் அறிவுரை கூறி இனிமேல் மது குடிக்க வேண்டாம் என்று கூறியும் அதனை செவிசாய்க்காமல் மீண்டும் ரவிச்சந்திரன் மது குடித்து வந்தார்.
இந்தநிலையில் ரவிச்சந்திரன் குடிநீர் தேக்க தொட்டி அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து அங்குள்ள ஊழியர் ராஜி இதுபற்றி ரவிச்சந்திரனின் சகோதரர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சிவக்குமார் விரைந்து வந்து ரவிச்சந்திரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






