search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பல்கலை பதிவாளரிடம் ரகளையில் ஈடுபட்ட பேராசிரியர்
    X

    கோப்பு படம்.

    பல்கலை பதிவாளரிடம் ரகளையில் ஈடுபட்ட பேராசிரியர்

    • சத்திய நாராயணனுக்கு மீண்டும் பேராசிரியர் பணி வழங்கப்படவில்லை.
    • சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    புதுச்சேரி:

    புதுவை பூர்ணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சத்ய நாராயணன் (வயது 49).

    இவர் புதுவை லாஸ் பேட்டையில் இயங்கும் சமுதாய கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரது ஒப்பந்த பணி காலம் முடிந்த நிலையில் மீண்டும் தனக்கு பணி வழங்க வேண்டும் என புதுவை பல்கலைக்கழக பதிவாளர் ரஜினீஸ்புதாணி யிடம் கேட்டார். சத்திய நாராயணனுக்கு மீண்டும் பேராசிரியர் பணி வழங்கப் படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சத்திய நாராயணன் பதிவாளரிடம் வாக்கு வாத்தில் ஈடுபட்டு அங்கிருந்த பூச்செடிகளை உடைத்துள்ளார்.

    மேலும் பதிவாளருக்கு பேராசிரியர் சத்திய நாராயணன் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ரஜினீஸ்புதாணி கொடுத்த புகாரின் பேரில் காலா ப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    Next Story
    ×