என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கடை முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
- பெரிய மார்க்கெட் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காய்கறி வியாபாரம் செய்ய சென்றார்.
- மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 49) இவர் பெரிய மார்க்கெட் காய்கறிகடையில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை இவர் பெரிய மார்க்கெட் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காய்கறி வியாபாரம் செய்ய சென்றார். பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் பழனி அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து பழனி பெரிய கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். மேலும் அங்குள்ள
சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Next Story






