என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் சக்திவேல் மது பழக்கத்தை கைவிடவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூர் அருகே அரங்கனூர் பாலாஜிநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சக்திவேல் (வயது37). கூலி தொழிலாளி.
இவரது மனைவி அஸ்வினி. கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அது முதல் சக்திவேல் குடி பழக்கத்துக்கு ஆளானார்.
மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.
இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் சக்திவேல் மது பழக்கத்தை கைவிடவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சக்திவேல் மது குடிக்க சென்றார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி சாய்ந்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுக்க முயன்றனர்.
ஆனால் சக்திவேல் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.






