என் மலர்
புதுச்சேரி

பாட்டு கச்சேரி பார்த்துக்கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து சாவு
- பாடல்களை ரசித்து கேட்டுக்கொண்டிருந்த போது திடீரென கீதா மயங்கி சாய்ந்தார்.
- பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது மனைவி கீதா(வயது39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவக்கொழுந்து இறந்து விட்டார். இதையடுத்து கீதா அங்குள்ள டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு கீதா அங்குள்ள மாதா கோவில் அருகே நடைபெற்ற பாட்டு கச்சேரியை பார்க்க சென்றார். பாடல்களை ரசித்து கேட்டுக்கொண்டிருந்த போது திடீரென கீதா மயங்கி சாய்ந்தார்.
அங்கிருந்தவர்கள் கீதாவை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கீதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கீதா திடீர் நெஞ்சு வலியால் இறந்து போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாட்டு கச்சேரியில் பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






