search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மின்சாரம் தாக்கியதில் தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி
    X

    கோப்பு படம்.

    மின்சாரம் தாக்கியதில் தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி

    • மின் கம்பி அறுந்து கொடி கம்பியில் விழுந்ததை தனம் கவனிக்காததால் அவரை மின்சாரம் தாக்கியது.
    • அவரது மகள் பிரியதர்ஷினி மற்றும் காந்தலட்சுமி ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு அருகே கரசூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வீரம்மாள் (வயது 43) கணவன்-மனைவி இருவரும் சேதராப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று வீரம்மாள் குடியிருக்கும் பகுதியில் வசிக்கும் தனம் என்பவர் கொடியில் துணி காயவைக்க முயன்றார்.அப்போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து கொடி கம்பியில் விழுந்ததை தனம் கவனிக்காததால் அவரை மின்சாரம் தாக்கியது.

    இதனால் தனம் அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு அவரது மகள் பிரியதர்ஷினி ஓடி வந்து தாயை காப்பாற்ற முயன்ற போது அவரையும் மின் சாரம் தாக்கியது.

    இதனை பார்த்த வீரம்மாள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த காந்தலட்சுமி ஆகியோர் பதறியடித்து ஓடிவந்த போது அவர்கள் மீது அறுந்து கிடந்த மின் கம்பி விழுந்ததில் அவர்களையும் மின்சாரம் தாக்கியது.

    இதில் படுகாயமடைந்த 4 பேரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தனம் அவரது மகள் பிரியதர்ஷினி மற்றும் காந்தலட்சுமி ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். வீரம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி வீரம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது கணவர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×