என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் மயங்கி விழுந்து சாவு
- அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அலமேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
முருங்கப்பாக்கம் சுகாதார ஊழியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மனைவி அலமேலு (வயது59). இவர் அரியாங்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் உதவி யாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 10 நாட்களாக அலமேலு கால்வீக்கம் மற்றும் கை நடுக்கம் காரணமாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதித்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த அமலமேலு திடீரென மயங்கி சாய்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலமேலுவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே அலமேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் பார்த்தீபன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






