என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கடலோர மண்டல மேலாண்மை குழு அமைக்க வேண்டும் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- மத்திய அமைச்சகம் விரிவான வழிகாட்டு தல்களை வெளியிட்டது.
- யூனியன் பிரதேச கடலோர மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
1991, 2011-ம் ஆண்டுகளில் கடலோர ஒழுங்குமுறை மண்ட லங்களை உருவாக்க மத்திய அமைச்சகம் விரிவான வழிகாட்டு தல்களை வெளியிட்டது. இந்த அறிவிப்பி ன்படி, புதுவை அரசு 2011-ல் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை அமல்படுத்தவும் கண்காணிக்கவும் யூனியன் பிரதேச கடலோர மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது.
மற்றொரு விதியானது, கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான ஒழுங்குமுறை மண்டலக் குழுவை அமைக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது. புவியியல் ரீதியாக 4 பகுதிகளாக இருப்பதை கருத்தில்கொண்டு, புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய இடங்களில் 4 பிராந்திய குழுக்களை அமைக்க அரசு முடிவு செய்தது. மீனவர்சமூகத்தின் 3 உறுப்பினர்கள் உட்பட 4 பிராந்தியங்களில் குழுக்க ளின் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அரசாணை 8-12-2014-ல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆணையை செயல்படுத்த வில்லை.
இதன் மூலம் மத்திய சட்டத்தின் நோக்கத்தையே புதுவை அரசு தோற்கடித்துவிட்டது. கடற்கரை மேலாண்மை பாதுகாக்கப்பட வில்லை. உடனடியாக 4 பிராந்தியத்திலும் கடலோர மண்டல மேலாண்மை குழுக்களை செயல்படுத்த கவர்னர், முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்