என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
8-வது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும்
- பென்ஷனர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்
- வனத்த சின்னப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ராகவேந்திரன் சிறப்புரை யாற்றினார். ஜெயராஜ் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை பென்ஷனர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு மாநாடு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். நமச்சிவாயம், இளங்கோ, பாலசுந்தரம், ராமஜெயம், ஜீவதாஸ், சாமுவேல், குணசேகரன், பெரியான் முன்னிலை வகித்தனர். முனீந்திரபாபு வரவேற்றார். ஜூலியானா பெர்னாண்டஸ், நடராஜன், பிரகாஷ், கொளஞ்சியப்பன், பிரேமதாசன், ராதா கிருஷ்ணன், செல்வராஜ், விட்டோபாய், ஜெயராமன், அசோகன், அந்துவான், ராமநாதன், வனத்த சின்னப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ராகவேந்திரன் சிறப்புரை யாற்றினார். ஜெயராஜ் நன்றி கூறினார்.
மாநாட்டில் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 8-வது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை உடனே வழங்க வேண்டும்.
நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.






