என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய வைரஸ் காய்ச்சலுக்கு 85 பேர் பாதிப்பு
- இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
- கடந்த ஜனவரி மாதம் 35 பேரும், பிப்ரவரி மாதம் 38 பேரும், இந்த மாதம் தற்போது 2 பேரும் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 'இன்புளூயன்சா-ஏ' வைரசின் துணை வைரசான 'எச்3 என்2' என்ற இந்த புதிய வைரசால் புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களில் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த ஜனவரி மாதம் 35 பேரும், பிப்ரவரி மாதம் 38 பேரும், இந்த மாதம் தற்போது 2 பேரும் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். எச்3 என்2 வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் 5 வயதுக்குட்பட்டவர்கள், 18 பேர் 6 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






