என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிபோதையில் ரகளை செய்த 6 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    குடிபோதையில் ரகளை செய்த 6 பேர் கைது

    • குடிபோதையில் ரகளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். காணும் பொங்கலை யொட்டி பல்வேறு இடங்களில் பொதுமக்க ளுக்கு இடையூறாக குடிபோதையில் ரகளை செய்பவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • விசார ணையில் அவர் கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    குடிபோதையில் ரகளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். காணும் பொங்கலை யொட்டி பல்வேறு இடங்களில் பொதுமக்க ளுக்கு இடையூறாக குடிபோதையில் ரகளை செய்பவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அதுபோல் வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் பள்ளியில் பொது இடத்தில் மது அருந்தி விட்டு ரகளை செய்த வாலிபரை வில்லியனூர் போலீசார் மடக்கி பிடித்தனர். விசார ணையில் அவர் கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் மடுகரை-ராம்பாக்கம் மெயின் ரோட்டில் ஒரு ஓட்டல் அருகே சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வகையில் குடிபோதையில் ரகளை செய்த பண்ருட்டி மாளிகை மேடு பகுதியை சேர்ந்த தேவா(27) என்பவரை மடுக்கரை போலீசாரும், மதகடிபட்டு சந்தை தோப்பு பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த இருதய ஆனந்ததாசன் என்பவரை திருபுவனை போலீசாரும், மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை ரோடு பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த தமிழக பகுதியான ராதாபுரத்தை சேர்ந்த சோழன் என்பவரை திருக்கனூர் போலீசாரும், நெட்டப்பாக்கம் தனியார் கம்பெனி அருகே குடிபோதையில் ரகளை செய்த கல்மண்பத்தை சேர்ந்த அருண்(30), சிவராந்தகத்தை சேர்ந்த சிவகுரு(20) ஆகிய 2பேரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×