search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    50 சதவீத அரசு இடங்களை தர வேண்டும்
    X

    கோப்பு படம்.

    50 சதவீத அரசு இடங்களை தர வேண்டும்

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தல்
    • தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மருத்துவ கல்லூரிகளில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் போடததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் ஏழை- எளிய மாணவர்களின் நலன்கருதி 50 சதவீத இடஒதுக்கீடு அரசுக்கு அளிக்க முன்வர வேண்டும்.

    கடந்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மருத்துவ கல்லூரிகளில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் போடததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அப்போது இடஒதுக்கீடு பற்றி பேசாதவர்கள் தற்போது பேச காரணம் என்ன? தேர்தல் சமயத்தில் இடஒதுக்கீடு பற்றி பேசவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசை விமர்சிக்கவும் காங்கிரசுக்கு எந்த அருகதையும் இல்லை.

    புதுவையில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகம் பயனடைவார்கள்.

    எனவே ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி பா.ஜனதா சார்பில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற மத்திய அமைச்ச ருக்கு கோரிக்கை மனு அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×