search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

    • திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடை எதிரே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படு வதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • இவர்கள் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் விற்று வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடை எதிரே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதிக்கு சென்று சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக நின்றுக்கொண்டிருந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மகாவிஷ்ணு நகரை சேர்ந்த ஆனந்த ராஜ்(வயது34), புதுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன்(54) வளவனூர் அருகே சிறுவந்தாடை சேர்ந்த ராஜி(58) மற்றும் கண்டமங்கலத்தை சேர்ந்த தாமோதரன்(50) என்பதும், இவர்கள் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் விற்று வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், செல்போன்கள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ. 15 ஆயிரத்து 460 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×