என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
- பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நெட்டப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நெட்டப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் 3 வாலிபர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து அவர்களது சட்டை பையில் சோதனை நடத்தினர்.
அதில் அவர்கள் சிறு சிறு பொட்டங்களாக 210 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் பிடிப்பட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வடலூரை சேர்ந்த பாலாஜி(வயது20), ஈஸ்வர்(18) மற்றும் திருப்பதி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.






