என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீச்சரிவாளுடன் பதுங்கி இருந்த 3 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    வீச்சரிவாளுடன் பதுங்கி இருந்த 3 பேர் கைது

    • புதுவை உழவர்கரை அரசு பள்ளி அருகே ஒரு கும்பல் குற்றம் செய்யும் நோக்கில் வீச்சரிவாளுடன் பதுங்கியிருப்பதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
    • தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை அரசு பள்ளி அருகே ஒரு கும்பல் குற்றம் செய்யும் நோக்கில் வீச்சரிவாளுடன் பதுங்கியிருப்பதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோடி விட்டது. அதில் ஒருவர் மட்டுமே சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ரெட்டியார்பாளையம் வயல்வெளி பகுதியை சேர்ந்த புவனேஷ்(வயது19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு வீச்சரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதுபோல் உருளையன்பேட்டை திடீர்நகரில் உள்ள தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் பின்புறத்தில் கத்தி மற்றும் வீச்சரிவாளுடன் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்துது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்ப வஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பலில் 2 பேர் தப்பியோடி விட்டனர். 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த நித்தீஷ், குயவர்பாளையம் கருணாகர பிள்ளை வீதியை சேர்ந்த மணிமாறன்(18), மற்றும் புதுவை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த டேனியல் என்பதும், தப்பியோடியவர்கள் திடீர்நகரை சேர்ந்த தேவகுமார்(19), உருளையன்பேட்டை தென்னஞ்சாலை வீதியை சேர்ந்த கவுதம்(22) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மற்ற 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×