என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிபோதையில் ரகளை செய்த 3 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    குடிபோதையில் ரகளை செய்த 3 பேர் கைது

    • வில்லியனூர்-நெட்டப்பாக்கம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • விசாரணையில் தமிழக பகுதியான சொரப்பூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஜீவகன்(35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர்-நெட்டப்பாக்கம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் தனியார் திருமண நிலையம் எதிரே நடுரோட்டில் ஒரு வாலிபர் மது அருந்தி கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது ரோந்து வந்த வில்லியனூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொம்பாக்கம் பேட் மாதாகோவில் வீதியை சேர்ந்த எழிலரசன்(வயது35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் நெட்டப்பாக்கம் போலீசார் அப்பகுதியில் உள்ள வடகொல்லி ரோடு பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு ஒரு வாலிபர் மது குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்ததை கண்டனர். இதைடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தமிழக பகுதியான சொரப்பூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஜீவகன்(35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மடுகரை தொந்தி ரெட்டிபாளையம் ரோட்டில் மது குடித்து விட்டு ரகளை செய்த வளவனூரை அடுத்த ஆலயாம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(30) என்பவரை மடுகரை புறகாவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

    புதுவை அரியாங்குப்பம் மணவெளி மந்தை தெருவில் ஒரு வாலிபர் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஓடைவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திமுருகன் (26) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×