search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை பல்கலைக்கழக பேராசிரியரிடம் ரூ.2.35 லட்சம் மோசடி
    X

    கோப்பு படம்.

    புதுவை பல்கலைக்கழக பேராசிரியரிடம் ரூ.2.35 லட்சம் மோசடி

    தனியார் நிறுவனம் ஜீவன் தம்பிக்கு வெளிநாடு செல்வதற்கான ஒரு சுற்றுலா திட்டத்தை கூறியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பல்கலைக்கழக குடியிருப்பை சேர்ந்தவர் ஜீவன் தம்பி வயது (67). இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரிடம் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஜீவன் தம்பிக்கு வெளிநாடு செல்வதற்கான ஒரு சுற்றுலா திட்டத்தை கூறியுள்ளது.

    இதுதொடர்பாக அவரிடம் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களான கபில் சிங், ஹீனா சவுத்ரி, ராகுல் ஹரோரா ஆகியோர் பேசி வெளிநாடிற்கு சுற்றுலா அழைத்து செல்வதற்கு ஒப்பந்தம் போட்டு ரூ.2. லட்சத்து 35 ஆயிரத்தை பெற்றனர். அதன்பிறகு, அவர்கள் குறித்த காலத்தில் சுற்றுலா அழைத்து செல்லாமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் பணத்தை திருப்பி அளிக்கு மாறு ஜீவன் தம்பி வற்புறுத்தினார். ஆனால் ஒப்பந்தம் போட்டுள்ளதால் பணத்தை திருப்பி அளிக்க முடியாது என மறுத்துவிட்டனர்.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜீவன் தம்பி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கபில் சிங், ஹீனா சவுத்ரி, ராகுல் ஹரோரா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×