என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
- சாலையில் செல்பவர்களை, ஆபாச வார்த்தைகளால் திட்டி வந்துள்ளனர்.
- பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் ஆலன் சாலை பகுதியில், 2பேர் குடித்துவிட்டு பொது மக்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நெட்டப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பார்த்த போது, அப்பகுதியில் 2 வாலிபர்கள் குடித்துவிட்டு சாலையில் செல்பவர்களை, ஆபாச வார்த்தைகளால் திட்டி வந்துள்ளனர். போலீ சார் இருவரையும் பிடித்து விசாரித்த போது, தமிழக பகுதியான பள்ளி புதுப்பட்டு மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த முருகையன் மகன் மாதவன் வயது 25, அன்பழகன் மகன் தீர்த்தமலை வயது 22 என்பது தெரியவந்துள்ளது.
பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதால், அவர்கள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






