என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கேமரா,பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது
    X

    கோப்பு படம்.

    கேமரா,பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது

    • 5 பைக்குள், 2 கேமரா, ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    • இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். தலைமறைவாக உள்ள கடலூர் பட்டாம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கோரிமேடு போலீசார் முருகா திரையரங்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்குகல் வேகமாக வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் சென்னை பட்டின பாக்கத்தை அஜய் (வயது 21) கடலூர் மேல்பட்டாம்பாக்கம் தேங்காய்திட்டு சேர்ந்த செல்வமணி ( 19) என்பது தெரியவந்தது. இவர்கள் ஓட்டி வந்த பைக்குள் திருட்டு வாக னம் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீமன் நகரில் உள்ள ஒரு ஸ்டுடியோவின் கதவை உடைத்து சென்று 2 கேமராக்களை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 பைக்குள், 2 கேமரா, ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். தலைமறைவாக உள்ள கடலூர் பட்டாம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×