search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
    X

    கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்த படம்.

    கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

    • லாஸ்பேட்டையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீ சாருக்கு தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீ சாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்த னர். அப்போது அங்கு போலீசாரை பார்த்ததும் 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.

    அவர்களது சட்டை பையில் சோதனை நடத்திய போது சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தனர். மொத்தம் 200 கிராம் கஞ்சாவை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் புதுவை உருளையன் பேட்டை சுப்பையாநகர் தென்னஞ்சாலை ரோட்டை சேர்ந்த மணிய ழகன்(வயது19) மற்றும் குயவர்பாளையனம் கோவிந்தராசு நாயக்கர் தெருவை சேர்ந்த சேரன்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×