search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 2 பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    புதுவையில் 2 பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை

    • புதுவையில் தனித்தனி சம்பவத்தில் 2 பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • குமார் உப்பளத்தில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக வசந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் தனித்தனி சம்பவத்தில் 2 பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    புதுவை பிள்ளைத் தோட்டம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வசந்தா (வயது60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    குமார் உப்பளத்தில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக வசந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் முற்றிலுமாக குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வசந்தா தினமும் அவதியடைந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் காலை குமார் வழக்கம் போல் மளிகை கடைக்கு சென்று விட்டார். பின்னர் சாப்பிட வீட்டுக்கு வந்த போது மின் விசிறியில் வசந்தா துப்பட்டாவால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு குமார் அதிர்ச்சியடைந்தார். நோய் கொடுமையால் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் முகையூரை சேர்ந்தவர் பெரியநாயகம். இவரது மனைவி மரியஸ்டெல்லா(54). இவர்களது 2-வது மகன் ஜூலியஸ் நெல்லித்தோப்பு பெரியார்நகர் ஜாபர்பாய் தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார்.

    இதையடுத்து பெரியநாயகமும், மரியஸ்டெல்லாவும் கடந்த சில ஆண்டுகளாக ஜூலியஸ் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். பெரியநாயகம் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த மரியஸ்டெல்லா மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர் வீட்டின் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு இறந்து போனார்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×