search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

    • புதுவை செட்டித்தெருவில் டெய்லர் கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்தனர்.
    • 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை செட்டித்தெருவில் டெய்லர் கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்தனர்.

    புதுவை செட்டித்தெருவில் உள்ள ஒரு டெய்லர் கடையில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது அந்த டெய்லர் கடையில் 2 பேர் ஒரு பேப்பரில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பிள்ளைத்தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மூலக்குளம் கோபாலன்கடை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பதும், இவர்கள் டெய்லர் கடையில் ரகசியமாக 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்று வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.26 ஆயிரத்து 500 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×