என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொது இடத்தில் ரகளை செய்த 2 பேர் கைது
    X

    கோப்பு படம்

    பொது இடத்தில் ரகளை செய்த 2 பேர் கைது

    • தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த திவ்யகுமரன் 32 என்பவரை ரெட்டியார் பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையத்தில் தனியார் மதுபானக்கடை அருகே ஒரு வாலிபர் குடிபோதையில் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இடையூராக அறுவரு க்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் தமிழ்நாடு மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் வயது 33 என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் பூமியான் பேட்டை நடேசன் நகர் பகுதியில் பொது இடத்தில் ரகளை செய்த வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த திவ்யகுமரன் 32 என்பவரை ரெட்டியார் பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×