என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
குடிபோதையில் தகராறு செய்த 2 பேர் கைது
- நெட்டப்பாக்கம்-மடுகரையில் குடிபோதையில் தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- நெட்டப்பாக்கம் போலீசார் காண்டீபன் மற்றும் கார்த்திகைராஜன் ஆகியோர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம்-மடுகரையில் குடிபோதையில் தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீசார் காண்டீபன் மற்றும் கார்த்திகைராஜன் ஆகியோர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெட்டப்பாக்கத்தில் ஒரு தனியார் கம்பெனி அருகே ஒரு வாலிபர் குடிபோதையில் நின்றுக்கொண்டு அவ்வழியே செல்வோரை திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார்.
மேலும் அவர் சிலரிடம் தகராறிலும் ஈடுபட்டார். இதையடுத்து ரோந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தமிழக பகுதியான வி.மாத்தூரை சேர்ந்த சக்திவேல்(வயது24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அதுபோல் மடுகரை-சிறுவந்தாடு ரோடு சந்திப்பில் மது குடித்து விட்டு ஒருவர் ரகளை செய்வதாக மடுகரை புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் தமிழக பகுதியான அரசமங்கலம் பகுதியை சேர்ந்த பாலகுரு என்ற பிரதாப்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுபோல் திருக்கனூர் அருகே கே.ஆர்.பாளையம் புளியந்தோப்பு பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த விக்கிரவாண்டி அருகே மூங்கில் பேட்டையை சேர்ந்த அன்பரசன்(46) என்பவரை திருக்கனூர் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்