search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்த 2 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்த 2 பேர் கைது

    • 300 கிராம் கஞ்சா, பணம், பைக் பறிமுதல்
    • கஞ்சா வாங்கி வந்ததும் 200 கிராம் கஞ்சாவை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒதியம்பட்டு ராம்பரதேசி கோவில் அருகே 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோருக்கு ரகசியதகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சந்தேகத்துக்கிடமாக பைக்கில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர்.

    அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தனர். அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில் அவர்களது பைக்கில் 300 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.

    அவர்களை கைது செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று துருவி துருவி விசாரணை நடத்தியதில், மேட்டுப்பாளையம் வண்ணாத்திகுளத்தைச் சேர்ந்த ஜெயவேல் (வயது 22), என்பதும் மற்றொருவர் வில்லியனூர் உத்தரவாகினி பேட் அபினேஷ் (வயது 22) என்பதும், இருவரும் ஆந்திர மாநிலம் குன்னூரில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 கிராம் கஞ்சா வாங்கி வந்ததும் 200 கிராம் கஞ்சாவை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    மீதமிருந்த 300 கிராம் கஞ்சாவை வைத்திருந்த போது போலீசார் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 300 கிராம் கஞ்சா 4 ஆயிரம் ரூபாய் பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயவேல் மற்றும் அபினேஷ் இருவரும் வில்லியனூரில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், தற்போது இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    Next Story
    ×