என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
    X

    கோப்பு படம்.

    புதுவையில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

    • புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.
    • இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 194 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ளது. புதுவையில் 2 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 194 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ளது. புதுவையில் 2 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 159, காரைக்காலில் 28, ஏனாமில் 6 , மாகியில் ஒருவர் என புதிதாக 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுவையில் 9, காரைக்காலில் 2, ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 588, காரைக்காலில் 113, ஏனாமில் 34 பேர் என 735 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 82, காரைக்காலில் 13, ஏனாமில்12, மாகியில் 2 பேர் என 109 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 49 ஆயிரத்து 414 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    Next Story
    ×