search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    150 வீடுகளுக்கு பட்டா வழங்க ஏற்பாடு
    X

     சர்வே டிபார்மெண்ட் நில அளவைத் துறை இயக்குனர் செந்தில்குமாரை நேரில் சந்தித்த காட்சி.

    150 வீடுகளுக்கு பட்டா வழங்க ஏற்பாடு

    • கென்னடி எம்.எல்.ஏ.நடவடிக்கை
    • விரைவில் பட்டா வழங்குவதற்கான ஆவணத்தை 2 வாரத்துக்குள் தயார் செய்கிறோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ராசு உடையார் தோட்டம் பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, அலுவலகம் சென்று அவரை சந்தித்து பட்டா வழங்க வேண்டி 3 மாதத்திற்கு முன்பு கோரிக்கை வைத்தனர்,

    ராசு உடையார் தோட்டத்தில் சுமார் 150 க்கு மேற்பட்ட வீடுகள் பட்டா இல்லாமல் இருக்கிறது, இது குறித்து சட்டசபையில் முதல்- அமைச்சரிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ பலமுறை பேசியுள்ளார். அதை தொடர்ந்து சர்வே டிபார்மெண்ட் நில அளவைத் துறை இயக்குனர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து 150-க்கு மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    விரைவில் பட்டா வழங்குவதற்கான ஆவணத்தை 2 வாரத்துக்குள் தயார் செய்கிறோம் என்று அவர் உறுதியளித்துள்ளார். தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் காலபான், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×