என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
எலக்ட்ரானிக் கடை உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி
- புதுவை காமராஜர் நகர் சவுந்தரராஜன் வீதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ
- இவர் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் நகர் சவுந்தரராஜன் வீதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய செல்போனில் தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ் சத்யம் என்பவர் தொடர்பு கொண்டார். அப்போது அவர் எலக்ட்ரானிக் பொருட்களை குறைந்த விலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ராஜேந்திரன், அவரது மனைவி தேன்மொழி ஆகியோரும் சுபஸ்ரீயுடன் தொடர்பு கொண்டு அடுத்தடுத்து பேசியுள்ளனர், இதனை நம்பிய சுபஸ்ரீ ரூ.15 லட்சம் அவரது வங்கி கணக்கில் இருந்து அனுப்பியுள்ளார்.
ஆனால், அவர்கள் கூறியது போல எலக்ட்ரானிக் பொருட்களை அனுப்பவில்லை. அவர்கள் பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சுபஸ்ரீ பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் சத்யம், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி தேன்மொழி ஆகிய 3 பேரையும் தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்