என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ரூ.1¼ கோடியில் பாலம் அமைக்கும் பணி
- முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
- ரூ. 3 கோடியே 98 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பாகூர் கொம்யூன் சோரியாங் குப்பம், குருவிநத்தம் கிராமத்துக்கு சுடுகாடுக்கு செல்ல தென்பெண்ணை யாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 32 லட்சத்தில் பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ, பொதுப்பணித் துறை தலைமை பொறி யாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறி யாளர் ராதா கிருஷ்ணன், உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் முதல் ஆதிங்கப்பட்டு வரை உள்ள சாலை, பிள்ளையார் குப்பத்திலிருந்து பின்னாச்சி குப்பம் வழியாக பாகூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
இதனால் போக்குவ ரத்துக்கு சிரமமாக இருந்தது. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ தொடர்ந்து வற்புறுத்தலின் பேரில் 2 முக்கிய சாலைக்கு நபார்டு வங்கியின் கடன் மூலம் ரூ. 3 கோடியே 98 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தலைமை பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் சந்திர குமார், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்