என் மலர்
செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் நத்திக்கு அபிஷேகம் நடைபெற்ற காட்சி
தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிரதோஷம்
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் மகா நந்திக்கு மஞ்சள், பால் போன்ற பல விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரிய கோவிலை மூட தொல்லியல் துறை உத்தரவிட்டது. ஆனால் கோவிலில் வழக்கமாக நடைபெறும் நான்கு கால பூஜைகள் நடந்தன.
பிரதோஷ தினத்தன்று பெரியகோவில் மகாநந்திக்கு திரவியப்பொடி, பால், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கோவில் மூடப்பட்டதால் நேற்று பக்தர்கள் இன்றி பிரதோஷம் நடந்தது.
பின்னர் மகாநந்திக்கு திரவியப்பொடி, பால், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பிரதோஷ தினத்தன்று பெரியகோவில் மகாநந்திக்கு திரவியப்பொடி, பால், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கோவில் மூடப்பட்டதால் நேற்று பக்தர்கள் இன்றி பிரதோஷம் நடந்தது.
பின்னர் மகாநந்திக்கு திரவியப்பொடி, பால், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Next Story






