search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    திருவண்ணாமலை கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் வீதி உலா நடை பெறும்.

    விழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது.



    இந்த விழா வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலை சாமி வீதியுலாவும், விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமை யிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாட்கள் மற்றும் விசே‌ஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஆனி பிரம்மோற்சவம் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
    Next Story
    ×