என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
Byமாலை மலர்26 Dec 2016 7:49 AM GMT (Updated: 26 Dec 2016 7:49 AM GMT)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.
10-ம் நாளான 12-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலினுள் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறமுள்ள 2668 அடிஉயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இவ்விழாவிவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 15 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருப்பதால் மேலும் விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
கட்டண தரிசனம், பொது தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்தனர். நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இன்றும் கூட்டம் அதிகளவில் உள்ளது.
கார்த்திகை தீபத்திருவிழா முடிந்ததும் அருணா சலேஸ்வரர் கோவிலில் இன்னும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை.
10-ம் நாளான 12-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலினுள் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறமுள்ள 2668 அடிஉயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இவ்விழாவிவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 15 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருப்பதால் மேலும் விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
கட்டண தரிசனம், பொது தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்தனர். நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இன்றும் கூட்டம் அதிகளவில் உள்ளது.
கார்த்திகை தீபத்திருவிழா முடிந்ததும் அருணா சலேஸ்வரர் கோவிலில் இன்னும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X