என் மலர்
செய்திகள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் லட்ச தீப பெருவிழா
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் லட்ச தீப பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சங்கு தீர்த்த புஷ்பகரணி மேளா லட்சதீப விழா நடைபெற்றது.

லட்சதீப விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு வேதகிரீஸ்வரர் மலையில் பட்டாசு வெடித்து பெரிய தீபம் ஏற்றப்பட்டது. சங்குதீர்த்த குளம், தாழக்கோவில் மற்றும் ஊர் முழுவதும் ஒரே நேரத்தில் லட்சத்துக்கு மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

அப்போது திருக்கழுக்குன்றம் ஊரே தீப ஒளியில் காட்சியளித்தது. இந்த காட்சியை பல லட்சம் பக்தர்கள் வீடுகளில் மாடிகளிலும், மலை மீதும், மரங்கள் மீதும் அமர்ந்து கண்டுகளித்தனர்

சிவனடியார்கள், துறவிகள் பலர் சங்கு ஒலி எழுப்பி வரவேற்றனர். பின்னர் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

லட்சதீப விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு வேதகிரீஸ்வரர் மலையில் பட்டாசு வெடித்து பெரிய தீபம் ஏற்றப்பட்டது. சங்குதீர்த்த குளம், தாழக்கோவில் மற்றும் ஊர் முழுவதும் ஒரே நேரத்தில் லட்சத்துக்கு மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

அப்போது திருக்கழுக்குன்றம் ஊரே தீப ஒளியில் காட்சியளித்தது. இந்த காட்சியை பல லட்சம் பக்தர்கள் வீடுகளில் மாடிகளிலும், மலை மீதும், மரங்கள் மீதும் அமர்ந்து கண்டுகளித்தனர்

சிவனடியார்கள், துறவிகள் பலர் சங்கு ஒலி எழுப்பி வரவேற்றனர். பின்னர் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
Next Story






