என் மலர்
செய்திகள்

12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் நாளை சங்குதீர்த்த விழா
திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சங்கு தீர்த்த புஷ்ப கரமேளா மற்றும் லட்சதீப விழா நாளை (2–ந் தேதி) விமரிசையாக நடக்கிறது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சங்கு தீர்த்த புஷ்ப கரமேளா மற்றும் லட்சதீப விழா நாளை (2–ந் தேதி) விமரிசையாக நடக்கிறது.
கன்னிராசிக்கு குரு பெயர்ச்சி நடக்கும் ஒவ்வொரு 12 ஆண்டுக்கும் ஒரு முறை இக்கோவில் திருக்குளத்தில் இருந்து சத்தத்துடன் சங்கு வெளிவரும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.
இதையொட்டி பக்தர்கள் தங்குவதற்கும் சென்று வரவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவில் குளத்தில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி கோவிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுஉள்ள அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இது குறித்து கலெக்டர் கஜலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சங்கு தீர்த்த புஷ்பகர மேளா, லட்சதீப விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்காக மாமல்லபுரம், மதுராந்தகம், திருப்போரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களின் வழியாக செல்லும் வகையில் 100 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
6 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் அந்தந்த இடங்களில் குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 8 அவசர சிகிச்சை வாகனங்களும், இரண்டு இருசக்கர மருத்துவ வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முறையாக பதிவு செய்யப்பட்ட 40 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒதுக்கப்பட்ட ஏழு இடங்களில் மட்டுமே அன்னதானங்கள் வழங்க வேண்டும். சோதனை செய்யப்பட்ட பிறகே உணவினை வழங்க வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை எளிதாக கண்டறியும் வகையில் எட்டு காவல் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 40 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்குதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
கோவில் குளத்து நீரில் முழ்கி குளிக்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
கரையில் 18 நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் மீது தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் உடைமாற்ற 5 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விழாவினையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கஜலட்சுமி கூறினார்.
கன்னிராசிக்கு குரு பெயர்ச்சி நடக்கும் ஒவ்வொரு 12 ஆண்டுக்கும் ஒரு முறை இக்கோவில் திருக்குளத்தில் இருந்து சத்தத்துடன் சங்கு வெளிவரும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.
இதையொட்டி பக்தர்கள் தங்குவதற்கும் சென்று வரவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவில் குளத்தில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி கோவிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுஉள்ள அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இது குறித்து கலெக்டர் கஜலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சங்கு தீர்த்த புஷ்பகர மேளா, லட்சதீப விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்காக மாமல்லபுரம், மதுராந்தகம், திருப்போரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களின் வழியாக செல்லும் வகையில் 100 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
6 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் அந்தந்த இடங்களில் குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 8 அவசர சிகிச்சை வாகனங்களும், இரண்டு இருசக்கர மருத்துவ வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முறையாக பதிவு செய்யப்பட்ட 40 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒதுக்கப்பட்ட ஏழு இடங்களில் மட்டுமே அன்னதானங்கள் வழங்க வேண்டும். சோதனை செய்யப்பட்ட பிறகே உணவினை வழங்க வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை எளிதாக கண்டறியும் வகையில் எட்டு காவல் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 40 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்குதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
கோவில் குளத்து நீரில் முழ்கி குளிக்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
கரையில் 18 நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் மீது தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் உடைமாற்ற 5 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விழாவினையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கஜலட்சுமி கூறினார்.
Next Story






