search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ்
    X
    இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ்

    சேஸிங்கை கண்டு எங்கள் வீரர்கள் பயப்படவில்லை: இங்கிலாந்து பயிற்சியாளர்

    அரையிறுதியில் சேஸிங்கை கண்டு பயப்படவில்லை என இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ் ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    இங்கிலாந்து அணி அதன் சொந்த மைதானத்தில் சேஸிங் செய்வதில் கிங்காக திகழ்ந்தது. இதனால் பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து சேஸிங் செய்தது.

    இங்கிலாந்து எளிதாக சேஸிங்  செய்துவிடும் என்ற நிலையில் பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    இதனால் அரையிறுதிக்கான வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டது.  அதன்பின் சுதாரித்துக் கொண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் சேஸிங் செய்த இங்கிலாந்து 221 ரன்னில் சுருண்டது.

    இரண்டு அணிகளும் அரையிறுதியில் மோதுகின்றன. அப்போது டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் கேட்டால் இங்கிலாந்து மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்யும் நிலை ஏற்படும்.

    அந்த சூழ்நிலை வந்தால் எங்கள் வீரர்கள் சேஸிங்கை கண்டு பயப்படவில்லை என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பெய்லிஸ் கூறுகையில் ‘‘கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் கடைசி 17 ஆட்டங்களில் 14 முறை சேஸிங்கில் வெற்றி பெற்றுள்ளோம். ஆகவே, எங்கள் வீரர்கள் சேஸிங்கை கண்டு பயப்படவில்லை.  இந்தத் தொடர் தொடங்கியபோது இருந்து ஆடுகளங்களை விட தற்போது சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. நாங்கள் முழு நம்பிக்கையுடன் அரையிறுதி ஆட்டத்தை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள இருக்கிறோம்’’ என்றார்.
    Next Story
    ×