search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா?
    X

    உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா?

    1992-ல் இருந்து ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகளை உலகக்கோப்பையில் இங்கிலாந்து வென்றதே கிடையாது என்ற நிலையில், அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 2015-ல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காள தேசத்திடம் தோல்வியடைந்து இங்கிலாந்து லீக் சுற்றோடு வெளியேறியது. அதன்பின் அணியில் பல மாற்றங்கள் செய்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ஏற்றவாறு தங்களது ஸ்டைலை மாற்றியது. மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த நான்கு வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

    இந்த முறை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் அந்த அணி உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டது.

    கணிப்புக்கு ஏற்ப இங்கிலாந்து தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக தோல்வியை சந்தித்ததால் அந்த அணிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதன்பின் இந்தியா மற்றும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றில் பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய முடியும்.



    ஆனால் இங்கிலாந்து அணி இந்த மூன்று அணிகளுக்கும் எதிராக உலகக்கோப்பையில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. 1992-ல் இருந்து வெற்றி பெற்றதே கிடையாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளிலும், இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 1983-ல் இருந்து ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றதே கிடையாது. 2011-ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

    இதனால் உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் முதன்மையாக கணிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சோதனை காத்திருக்கிறது. இந்த சோதனையை வென்று அரையிறுதிக்கு முன்னேறினால்தான் உலகக்கோப்பை சாம்பியன் குறித்து நினைத்துக் பார்க்க முடியும்.
    Next Story
    ×