என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமியார் காலமானதால் மலிங்கா அவசரமாக இலங்கை திரும்புகிறார்
    X

    மாமியார் காலமானதால் மலிங்கா அவசரமாக இலங்கை திரும்புகிறார்

    உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா அவசரமாக இலங்கை திரும்புகிறார்.
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இன்று இலங்கை அணி வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக மலிங்கா முழுவீச்சில் தயாராகி கொண்டிருந்தார்.

    இந்நிலையில் அவரது மாமியார் காலமாகிவிட்டதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்றைய போட்டி முடிந்த பின்னர் அவசரமாக இலங்கை திரும்புகிறார். பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×