இந்திய ராணுவம் வெளியேறுகிறது: பாராளுமன்றத்தில் உறுதிப்பட அறிவித்த மாலத்தீவு அதிபர்

மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்வு சீனாவுக்கு ஆதரவான போக்கை கடைபிடித்து வருகிறார்.ராணுவம் தொடர்பான இந்தியா உடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க மாலத்தீவு மறுத்து விட்டது.
இந்திய ராணுவம் வெளியேறுகிறது: பாராளுமன்றத்தில் உறுதிப்பட அறிவித்த மாலத்தீவு அதிபர்
Published on

மாலத்தீவில் உள்ள விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்தது. மனிதாபிமான அடிப்படையிலான உதவி, மருத்துவ பொருட்கள் தொடர்பான உதவி ஆகியவற்றிற்காக பயன்படுத்தி வந்தது.

புதிதாக பதவி ஏற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் எனத் தெரிவித்தார். இது தொடர்பான இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மார்ச் 10-ந்தேதி மூன்று தளங்களில் ஒன்றில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறும். மே 10-ந்தேதி மேலும் இரண்டு தளங்கள் என முற்றிலுமாக இந்திய ராணுவம் வெளியேறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலத்தீவு பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்றத்தில் பேசிய மகமது முய்சு "எந்தவொரு நாடும் எங்களது நாட்டின் இறையாண்மையில் தலையிடுவது அல்லது குறைந்து மதிப்பிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம். இந்திய ராணுவம் வெளியேறும்" என்றார்.

87 இடங்களை கொண்டிருக்கும் இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளான எதிர்க்கட்சிகளான எம்.டி.பி. (43), ஜனநாயக கட்சி (13) எம்.பி.க்கள் முகமது முய்சுவின் பேச்சை புறக்கணித்தனர். நிர்வாகப் பதவியை பெறுவதற்கான ஏழு எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 80 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் 24 எம்.பி.க்கள் முன்னிலையில்தான் முகமது முய்சு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com