என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
மாணவனுடன் ஆசிரியை தகாத உறவு: "டிராக்கிங் செயலி" மூலம் கையும் களவுமாக பிடித்த தாய்
- உயர்நிலை பள்ளியில படித்து வரும் தன் மகனை ரக்பி பயிற்சிக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
- ரக்பி பயிற்சிக்கு செல்லாமல் ஆசிரியையுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவின் தென் கரோலினாவில் ஆசிரியை ஒருவர் 18 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது அந்த மாணவனின் தாய் கையும் களவுமாக பிடித்து ஆசிரியையை போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தெற்கு கரோலினாவில் உள்ள தெற்கு மெக்லென்பர்க்கில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 18 வயது மாணவன் படித்து வருகிறான். இவனை அவனது பெற்றோர் ரக்பி பயிற்சிக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
ரக்பி பயிற்சிக்கு செல்லாமல் அடிக்கடி 26 வயதான ஆசிரியையுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்தது. மேலும், பள்ளியிலும் இதுகுறித்து வதந்தி பரவிய வண்ணம் இருந்துள்ளது.
இதனால் அந்த மாணவின் பெற்றோர் அவனை ரகசியமாக கண்காணிக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் டிராக்கிங் செயலியை (Life360) பயன்படுத்தியுள்ளனர்.
லைஃப் 360 செயலி ஒரு குடும்ப சமூக நெட்வொர்க் செயலியாகும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை இந்த செயலி மூலம் ஷேர் செய்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து தகவல் தெரிவிக்கும்.
அந்த மாணவனின் தாய் இந்த செயலியை பயன்படுத்தி தனது மகனை கண்காணித்து வந்துள்ளார். ஒரு நாள் அவரது மகன் இருக்கும் இடத்தை அந்த செயலி மூலம் தெரிந்து கொண்ட தாய், அதன்வழியாக பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
ஆப்போது ஒரு பூங்கா அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் அவரது மகன் இருப்பதாக காண்பித்துள்ளது. அந்த காருக்குள் எட்டிப்பார்த்த அந்த தாய்க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது மகன் படித்து வரும் அதே பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியை, அநத மாணவனுடன் தகாத உறவில் இருப்பதை கண்டுள்ளார். இருவரும் ஒன்றாக இருப்பதை போட்டோ எடுத்து, உடனடியாக அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியையை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்துள்ளனர்.
அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாடு தழுவிய விடுமுறை அக்டோபர் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை பல்வேறு தேதிகளில் கொண்டாடப்படும். இந்த விடுமுறையின்போதுதான் ஆசிரியை மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்