search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா சரமாரி தாக்குதல்- அணுமின் நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு
    X

    உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா சரமாரி தாக்குதல்- அணுமின் நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு

    • அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள நகரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.
    • பிரிவினைவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் நகரிலும் தாக்குதல்

    கீவ்:

    உக்ரைனின் தெற்கு பகுதியில் தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள், இன்று மைகொலெய்வ் நகரம் மற்றும் அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள நகரிலும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்கி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    பிரிவினைவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் நகரிலும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் 6 பேர் கொல்லப்பட்டதாக ரஷிய ஆதரவு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    கடந்த சில வாரங்களாக மைகோலெய்வின் இரண்டு மாவட்டங்களை குறிவைத்து இடைவிடாமல் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் உக்ரைன் அரசு கூறி உள்ளது.

    Next Story
    ×