search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இறந்தவர் உடலை 2 ஆண்டுகளாக ஃபிரீசரில் வைத்த நபர் - காரணம் என்ன தெரியுமா?
    X

    இறந்தவர் உடலை 2 ஆண்டுகளாக ஃபிரீசரில் வைத்த நபர் - காரணம் என்ன தெரியுமா?

    • 2018 செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வெயின்ரைட் என்ற முதியவர் உயிரிழந்தார்.
    • வெயின்ரைட்-இன் வங்கி கணக்கை பயன்படுத்தி அவரது பென்ஷன் தொகையை கொண்டு ஜாலியாக வசித்து வந்துள்ளார்.

    பிரிட்டன் சேர்ந்த நபர் இறந்து போன முதியவரின் உடலை இரண்டு ஆண்டுகள் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இவர் ஏன் இவ்வாறு செய்தார் என்ற காரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, எப்படி இந்த மாதிரி எல்லாம் செய்ய முடியும் என்று விழிபிதுங்க வைத்துள்ளது.

    2018 செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வெயின்ரைட் என்ற முதியவர் உயிரிழந்தார். இவரது உடல் உறைய வைக்கும் கருவியில் (ஃபிரீசர்) மறைத்து வைக்கப்பட்டு இருந்ததால், இவரது உடல் ஆகஸ்ட் 22, 2020 அன்று தான் கிடைத்தது. ஜான் வெயின்ரைட் உடலை 52 வயதான டேமியன் ஜான்சன் என்பவர் மறைத்து வைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

    முதியவரின் உடலை மறைத்து வைத்துக் கொண்டதோடு டேமியன் ஜான்சன் உயிரிழந்த ஜான் வெயின்ரைட்-இன் வங்கி கணக்குகளை பயன்படுத்தி அவரது பென்ஷன் தொகையை கொண்டு ஷாப்பிங் செய்வது, ரொக்கத்தை எடுத்து செலவிடுவது என்று ஜாலியாக வசித்து வந்துள்ளார்.

    வெயின்ரைட்-இன் வங்கி கார்டு கொண்டு பணம் எடுத்துக் கொள்வது, பொருட்களை வாங்குவது மற்றும் தனது சொந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவது போன்ற செயல்களில் செப்டம்பர் 23, 2018 முதல் மே 7, 2020 வரை டேமியன் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டேமியன் ஜாமின் பெற்று வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகிறார்.

    Next Story
    ×