என் மலர்
உலகம்

இந்தோனேசியாவில் இரண்டு ரெயில்கள் மோதி விபத்து: 3 பேர் பலி
- பயணிகள் ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
- ரெயில் பயணிகளின் பல பெட்டிகள் தரம் புரண்டதால் பலர் காயம்
இந்தோனேசியாவின் முக்கியமான தீவுகள் ஒன்றான ஜாவாவில் இன்று இரண்டு ரெயில்கள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகரின் கிழக்கு மாகாணமான சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற ரெயில், சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் மீது பயங்கரமாக மோதியது.
இந்த ரெயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதில் குறைந்தது 3 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
Next Story






