என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
வரி விதிப்பிற்கு எதிர்ப்பு- இலங்கையில் இன்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்
- இலங்கையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
- வரி உயர்வை உடனே திரும்ப வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.
கொழும்பு:
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்நாட்டு அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்.
அதன் பிறகு அவர் பொருளாதார சரிவில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அத்தியாவசிய பொருட்கள் மீது புதிய வரியை விதித்தார். இதற்கு பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஏற்கனவே விலைவாசி உயர்வால் தத்தளித்து கொண்டிருக்கும் போது புதிய வரிகளை விதிப்பதா? என கண்டனம் தெரிவித்தனர். மேலும் வரிவிதிப்புக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் எனக்கோரி இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.
இந்த போராட்டத்துக்கு வங்கி ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர், டாக்டர்கள் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்த போராட்டத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி இன்று (1-ந்தேதி) தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அவர்கள் வரி உயர்வை உடனே திரும்ப வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்