என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் மாணவர்களுடன் பாலியல் உறவு- பள்ளி ஆசிரியைகள் 6 பேர் கைது

    • ஒக்லஹோமாவை சேர்ந்த ஆசிரியை தங்களிடம் படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவில் டான்வில்லி பகுதியை சேர்ந்தவர் எலன்ஷெல் (வயது38). பள்ளி ஆசிரியையான இவர் தனது பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய 2 மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதே போல ஆர்கன்சாஸ் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஹீதர்ஹேர் (வயது32) என்ற ஆசிரியையும், ஒக்லஹோமாவை சேர்ந்த ஆசிரியையான எமிலி ஹான்காக் (26) என்பவரும் தங்களிடம் படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து வெர்ஜினியாவில் உள்ள ஆசிரியர் ஜேம்ஸ் மேடிசன் லிங்கன் கவுண்டியில் உள்ள ஆசிரியையான டெலானி ஹான்காக். அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் கிறிஸ்டன் காண்ட் என்ற ஆசிரியர் தங்களிடம் படிக்கும் மாணவியுடன் முறை தவறிய உறவில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை தவிர பென்சில்வேனியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் பெண் பயிற்சியாளர் ஹன்னா மார்த் என்பவரும் மாணவர் ஒருவருடன் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவில் மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×