என் மலர்
உலகம்

ஜப்பான் கடற்கரையில் மிகப்பெரிய மர்ம பந்து கிடந்ததால் பரபரப்பு
- ஜப்பானிய போலீஸ் அதிகாரிகள் கடற்கரைக்கு சீல் வைத்து, மர்ம பந்தை ஆய்வு செய்தனர்.
- கடற்கரையில் மிகப்பெரிய அளவில் மர்ம பந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜப்பான், டோக்கியோவிலிருந்து 155 மைல் தொலைவில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான ஹமாமட்சுவில் கடந்த செவ்வாய்கிழமை அன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் மிகப்பெரிய வடிவில் மர்ம பந்து ஒன்று கிடந்தது. இதுதொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசுக்கு புகார் அளித்தார்.
பின்னர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த ஜப்பானிய போலீஸ் அதிகாரிகள் கடற்கரைக்கு சீல் வைத்து, மர்ம பந்தை ஆய்வு செய்தனர்.
1.5 மீட்டர் விட்டம் கொண்ட உலோகத்தால் ஆன, துரும்பிடித்த இந்த மர்ம பந்தை எக்ஸ்ரே சோதனை செய்ததில் உள்ளே வெற்றிடம் இருப்பதாகவும், வெடிக்கும் அபாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
பின்னர் அன்று மாலை 4 மணியளவில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. கடற்கரையில் மிகப்பெரிய அளவில் மர்ம பந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






