என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் சோகம் - ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் பலி
    X

    அமெரிக்காவில் சோகம் - ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் பலி

    • அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ளது மவுயி தீவு.
    • இந்தத் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் இறந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது மவுயி தீவு. இந்தத் தீவில் உள்ள காடுகளில் திடீரென தீ பிடித்தது.

    வேகமாக வீசி வரும் காற்றினால் வனப்பகுதியில் தீ வேகமாக பரவியது. தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    லஹைனா பகுதியிலும் காட்டுத் தீ பரவியதால் வானுயர கரும்புகை எழுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களை பத்திரமாக மீட்க கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன.

    இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என மவுயி தீவு மேயர் ரிச்சர்ட் பைசன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×