என் மலர்tooltip icon

    உலகம்

    பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சிறுவனை கடித்த சுறா
    X

    பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சிறுவனை கடித்த சுறா

    • ஷார்க் டேங்க் தொட்டியில் நீந்தியவாறே சுறா மீன்களை காணலாம்
    • தொட்டி நீர் ரத்தமாக மாறியதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்

    அமெரிக்காவின் மேரிலேண்டு மாநிலத்தின் உள்ளது பால்டிமோர் (Baltimore).

    பால்டிமோரில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவு (Atlantis Paradise Island) பகுதியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஸ்னார்கெலிங் (snorkeling) எனப்படும் நீர் விளையாட்டு பிரபலமானது.

    "ப்ளூ அட்வென்சர்ஸ் பை ஸ்டூவர்ட் கோவ்" எனும் நிறுவனம், இத்தீவில் "ஷார்க் டேங்க்" எனும் சுறா மீன் உள்ள மிக பெரிய தொட்டியில் பார்வையாளர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிகழ்ச்சியில், ஷார்க் டேங்க் தொட்டியில் "ஸ்னார்கெலிங்" செய்தவாறே சுறா மீன்களை காணும் வசதி செய்யப்பட்டிருந்தது.

    இந்த விளையாட்டிற்காக தங்கள் 10 வயது மகனுடன் ஒரு தம்பதியினர் வந்திருந்தனர். அவர்களும் அந்த தொட்டியில் நீந்தியவாறே சுறா மீன்களை கண்டுகளித்து வந்தனர்.

    அச்சிறுவன் சுறா மீன்களை ஆர்வமாக கண்டவாறு மகிழ்ச்சியில் நீந்தி கொண்டிருந்தான்.

    அப்போது இரு சுறாக்கள் அவன் அருகே நீந்தி வந்தன. எதிர்பாராதவிதமாக அதில் ஒரு சுறா திடீரென அவன் மீது பாய்ந்து கடித்தது.

    அத்தொட்டி நீர் ரத்த போல் மாறியது. உடன் நீந்திய அவனது பெற்றோர் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அச்சிறுவனின் தந்தை உடனடியாக நீந்தி தனது மகனருகே வந்து அவனை மேலே தூக்கி சென்றார்.

    பாதுகாவலர்கள் உதவியுடன் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவன் கால் பலமாக சுறாக்களால் கடிக்கப்பட்டது தெரிய வந்தது.

    அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமடைந்து வருகிறான்.

    இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் முன்பாக ஆபத்துகளை விளக்கும் சில கோப்புகளில் சிறுவனின் பெற்றோர் கையெழுத்திட்டிருந்தனர். எனவே, அவர்கள் அபாயத்தை உணர்ந்து தாங்களாக முன்வந்து இதில் பங்கேற்றதால், நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் அதன் பொறுப்பை துறந்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து ராயல் பஹாமாஸ் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×