search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் இடைத்தேர்தல் - இம்ரான்கான் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி
    X

    இம்ரான்கான்

    பாகிஸ்தான் இடைத்தேர்தல் - இம்ரான்கான் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி

    • அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.
    • இம்ரான்கான் கட்சியின் 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிக அளவு பணவீக்கம், அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தின் கீழ்சபையிலிருந்து ராஜினாமா செய்தனர்.அந்த இடங்களுக்கு ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, பாகிஸ்தான் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றார்.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இம்ரான்கான் கட்சியினர் மொத்தம் இடைத்தேர்தல் நடந்த எட்டு இடங்களில் 7-ல் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன்மூலம் பாகிஸ்தான் அரசியலில் இம்ரான்கான் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதைக் காட்டுகிறது. இதையடுத்து, பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் வர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

    Next Story
    ×